முதியவரை கடத்தி பணம் பறித்த பெண்
தனக்கு தர வேண்டிய பணத்தினை தராத முதியவரை நான்கு ஆண்களுடன் இணைந்து பெண்ணொருவர் கடத்தி சென்று பணத்தினை பறித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், ஆள் கடத்தல், வலுக் கட்டாயமாக பணம் பறித்தமை, தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் பெண்ணையும் அவருடன் இணைந்த மேலும் நான்கு ஆண்களையும், கைது செய்வதற்காக பொலிஸார் தேடி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
யாழ்ப்பாணம், கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர், பெண்ணொருவருக்கு காணி ஒன்றினை விற்பனை செய்வதற்கான முற்பணமாக 15 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுள்ளார்.
காணியை பெண்ணுக்கு விற்காத நிலையில், கொடுத்த பணத்தினை, பெண் திருப்பி கேட்டுள்ளார் முதியவர் பணத்தினை கொடுக்காது தள்ளி போட்டுள்ளார்.
இந்நிலையில் 09 ஆம் திகதி பணம் கொடுத்த பெண், வாகனம் ஒன்றில் நான்கு ஆண்களுடன் முதியவரின் வீட்டுக்கு அருகில் சென்று முதியவரை வாகனத்தில் கடத்தி சென்று, தாக்கி அவரிடமிருந்து 15 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக் கொண்ட பின்னர் முதியவரை விடுவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து முதியவர் தன்னை கடத்தி பணம் பறித்தவர்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

No comments:
Post a Comment