அண்மைய செய்திகள்

recent
-

நீண்ட காலமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் கைது

 அம்பாறை - பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு இந்து மயானம் அருகில் உள்ள வெற்றுக் காணிகளில் தினமும் பணத்திற்காக சட்ட விரோதமாக ஒன்று கூடி சூதாட்ட நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருவதாக பொதுமக்களிடம் இருந்து பொலிஸாருக்கு தகவல் கிடைக்க பெற்றிருந்தது.


குறித்த முறைப்பாட்டிற்கு அமைய சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே. வீரசிங்க வழிநடத்தலில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து 28 சந்தேக நபர்களை நேற்று (9) மாலை கைது செய்தனர்.

சட்ட விரோதமாக ஒன்று கூடி பல்வேறு சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைதான அனைவரும் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளதுடன் எதிர்வரும் 12 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக வழிநடத்தலில் பெரிய நீலாவணை பொலிஸார் குற்றங்களை குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



நீண்ட காலமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் கைது Reviewed by Author on July 10, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.