அண்மைய செய்திகள்

  
-

புத்தளத்திலிருந்து – நுவரெலியா நோக்கி பயணித்த சொகுசு பேரூந்து விபத்து

 புத்தளத்திலிருந்து – நுவரெலியா நோக்கி பயணித்த சொகுசு பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குறித்த பேரூந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்,

புத்தளத்திலிருந்து-நுவரெலியாவுக்கு சுற்றுலாவுக்குச் சென்ற சிலரே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் காயமடைந்தவர்களில் நால்வர் கொத்மலை பிராந்திய வைத்தியசாலையிலும் மேலும் நால்வர் புஸ்ஸல்லாவ வஹுகபிட்டிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவருகின்றது என்று தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவகின்றமை குறிப்பிடத்தக்கது.



புத்தளத்திலிருந்து – நுவரெலியா நோக்கி பயணித்த சொகுசு பேரூந்து விபத்து Reviewed by Author on July 10, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.