அண்மைய செய்திகள்

recent
-

மரதன் போட்டியில் வெற்றியீட்டிய வர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வு

 சர்வதேச புகைத்தல் மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட மரதன் போட்டியில் வெற்றியீட்டிய வர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வு இன்று(31) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில்  மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் முபாரக் தலைமையில் நடைபெற்றது


சர்வதேச புகைத்தல் மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட  மரதன் ஓட்ட போட்டியானது இன்று (31) காலை முல்லைத்தீவில் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து அதில் வெற்றியீட்டிய வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று(31) காலை  11.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டார வன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது


இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் மேலதிக மாவட்ட செயலாளர் சி.குனபாலன் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வெற்றியீட்டிய வர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர் 


நிகழ்வில் அரச அதிகாரிகள் போட்டியாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்










மரதன் போட்டியில் வெற்றியீட்டிய வர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வு Reviewed by Author on May 31, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.