அண்மைய செய்திகள்

recent
-

பர்தா அணிந்ததால் வெளிவராத உயர்தர புள்ளிகள் பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆளுநரிடம் முறைப்பாடு

 திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட மாணவர்களின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் குறித்த மாணவர்கள் இன்று சனிக்கிழமை முறைப்பாடு செய்தனர். 

பரீட்சைகள் திணைகளத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக  காதுகளை மறைத்து பர்தா அணிந்து பரீட்சை எழுத முடியாத நிலையில், இம்மாணவர்கள்  அவ்வாறு பரீட்சைகள் எழுதியதால் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் தாம் எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலைமை குறித்து ஆளுநரின் கவனத்துக்கு கொண்டவந்த மாணவர்கள், தமக்கு உரிய தீர்வை பெற்றுதர நடவடிக்கைகைள எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். 

மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான், அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடி உரிய தீர்வை பெற்றுத்தருவதாக மாணவர்களிடம் உறுதியளித்தார்.



பர்தா அணிந்ததால் வெளிவராத உயர்தர புள்ளிகள் பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆளுநரிடம் முறைப்பாடு Reviewed by Author on June 15, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.