சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவு: காரணம் என்ன ?
சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்த மாதம் குறைவடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
விசா வழங்கல் தொடர்பான பிரச்சினைகளே இதற்கான காரணம் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கவுள்ள 39 நாடுகளின் பிரஜைகளுக்கான விசா இல்லாத பயண வாய்ப்புகள், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க உதவும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
2024 ஆம் ஆண்டிற்கான 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் இலக்கை அடைய இந்த முயற்சி உதவும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த முதலாம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 70,678 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
September 26, 2024
Rating:


No comments:
Post a Comment