அண்மைய செய்திகள்

recent
-

பொதுஜன பெரமுனவுடன் இணைகிறதா சுதந்திரக் கட்சி?: வெளியான புதிய தகவல்

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் 40 தொகுதி அமைப்பாளர்களை பொதுத் தேர்தலில் களமிறக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் பிரசார செயலாளர் திசர குணசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டிற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் சிலர் தீர்மானித்துள்ளதாக கட்சியின் உப தவிசாளர் சட்டத்தரணி கீர்த்தி உடவத்த தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இம்முறை இருவர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் இளம் சமுதாயத்தின் பிரதிநிதித்துவத்துக்கு முன்னுரிமை அளித்து அதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




பொதுஜன பெரமுனவுடன் இணைகிறதா சுதந்திரக் கட்சி?: வெளியான புதிய தகவல் Reviewed by Author on October 04, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.