அண்மைய செய்திகள்

recent
-

இலஞ்சம் பெற்ற போக்குவரத்து திணைக்களத்தின் உதவி ஆணையாளர் உட்பட மூவர் கைது

மூன்று பஸ்களின் உரிமையை மாற்றுவதற்கு 3 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் போக்குவரத்து திணைக்களத்தின் உதவி ஆணையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கொழும்பு நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகத்தில் வைத்து இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவிற்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து திணைக்களத்தின் உதவி ஆணையாளரும் அத்திணைக்களத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேக நபரான போக்குவரத்து திணைக்களத்தின் உதவி ஆணையாளர் தன்னிடமிருந்த  இலஞ்சம் பெற்ற பணத்தைக் கிழித்தெறிய முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இலஞ்சம் பெற்ற போக்குவரத்து திணைக்களத்தின் உதவி ஆணையாளர் உட்பட மூவர் கைது Reviewed by Author on October 05, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.