மன்னாரில் சாதாரண தர பரீட்சையில் சாதித்த பின்தங்கிய கிராமத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள்.
மன்னார் கல்வி வலயத்தில் மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றாக மன் மடுக்கரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை காணப்படுகின்றது.
குறித்த பாடசாலையில் தரம் 1 முதல் 10 வரையிலான வகுப்புகள் மாத்திரம் காணப்பட்டது.இதனால் சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்புக்களை தெரிவு செய்ய மாணவர்கள் அயல் பாடசாலைகளான நானாட்டான் மற்றும் முருங்கன் பாடசாலைகளுக்கு பஸ்ஸிலும்,துவிச்சக்கர வண்டியிலும் சுமார் 5 கிலோ மீற்றர் தூரம் வரை சென்று கல்வி கற்று வந்தனர்.
-மடுக்கரை கிராமத்தை சூழ்ந்துள்ள மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு பெற்றோரின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் வலயக்கல்வி அலுவலகம் கடந்த 2019 ஆம் ஆண்டு இப்பாடசாலையை கா.பொ.த.சாதாரண தரம் வரை தரம் உயர்த்தி அதற்கான வளங்களையும் வழங்கியது.
Reviewed by Author
on
October 05, 2024
Rating:




No comments:
Post a Comment