அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னாரில் 10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை-தடுப்பிலிருந்து தப்பிச் சென்ற நபர் 6 மாதங்களின் பின் கைது. எதிர் வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவு

 தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த  பெப்பிரவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர்  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட  55 வயதுடைய நபர்  தப்பிச் சென்ற நிலையில் குறித்த நபர்  கைது செய்யப்பட்டு  இன்றைய தினம் திங்கட்கிழமை(16) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது  நபரை எதிர்வரும் 26 ஆம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான்   உத்தரவிட்டார்.


தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில்,தப்பிச் சென்ற குறித்த நபர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (15) திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு,தலைமன்னார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


தலைமன்னார்  போலீசார் தடுத்து வைத்து விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் திங்கட்கிழமை (16) காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தி பின்னர் இன்றைய தினம் திங்கட்கிழமை (16) காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.


இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 26 ஆம்   திகதி  (26/12/2024) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.


தப்பிச் சென்ற குறித்த நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த  நபர் நேற்றைய தினம் (15) ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.


தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்பிரவரி மாதம் 15 ஆம் திகதி மாலை காணாமல் போன அக்கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி தனது அம்மம்மாவின் வீட்டில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள தென்னந் தோப்பில் இருந்து மாறு நாள் 16 ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்டார்.


சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட சடலம் பரிசோதனையின் போது குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தெரிய வந்தது.


குறித்த கொலை தொடர்பாக வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தந்து குறித்த தோட்டத்தில் வேலை செய்து வந்த  55 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மே மாதம் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில்,வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றார். 


இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக குறித்த நபர் தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (15)   திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் உள்ள காட்டு பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(









தலைமன்னாரில் 10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை-தடுப்பிலிருந்து தப்பிச் சென்ற நபர் 6 மாதங்களின் பின் கைது. எதிர் வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவு Reviewed by Author on December 16, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.