மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை
உலக வாழ் இஸ்லாமியர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை (28) புனித ஹஜ் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் நிலையில் மன்னார் மாவட்ட இஸ்லாமியர்களும் ஹஜ் பெருநாளை கொண்டாடி உள்ளனர்.
இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை இடம் பெற்றது.
அஷ்ஷெய்க் T.M .தஸ்னீம் மௌலவி தலைமையில் குறித்த திடல் தொழுகை இடம் பெற்றது.அதனை தொடர்ந்து 'இறைத்தூதரின் தியாகம்' எனும் தலைப்பில் பெருநாள் பிரசங்கம் இடம் பெற்றது.
தொழுகையை தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் தமது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.இதேவேளை மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகை இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
May 28, 2026
Rating:


No comments:
Post a Comment