அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வாழ்க்கை பெற்றான் கண்டல் புனித நீக்கிலார் ஆலய நுழைவாயில் அலங்கார வளைவு மற்றும் புதிய மணிக்கோபுரம் ஆகியவை மறைமாவட்ட ஆயரினால் திறந்து வைப்பு.

மன்னார் மறைமாவட்டம் அளவக்கை பங்கின் வாழ்க்கை பெற்றான் கண்டல் புனித நீக்கிலார் ஆலய நுழைவாயில் அலங்கார வளைவு மற்றும் புதிய மணிக்கோபுரம் ஆகியவை நேற்று வெள்ளிக்கிழமை (24)   திறந்து வைக்கப்பட்டது.



அளவக்கை பங்கின் துணை ஆலயமாகிய வாழ்க்கை பெற்றான் கண்டல் புனித நீக்கிலார் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆலய நுழைவாயில் அலங்கார வளைவு மற்றும் புதிய மணிக்கோபுரம் ஆகியவை    நேற்று வெள்ளிக்கிழமை (24) மாலை  மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால்  ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து ஆயர்  அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.


 இந்நிகழ்வில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. கிறிஸ்து நேச ரட்னம் அடிகளார் இ ஆயரின் செயலர் அருட்தந்தை அன்ரனி அடிகளாரும்  கலந்து கொண்டிருந்தனர்.


 அளவக்கை பங்குத்தந்தை அருட்பணி. யேசுபரநாதன் (டிக்சன்) அடிகளார் மற்றும்  ஆலய பங்கு  மக்களின் பூரண ஒத்துழைப்பாலும் குறித்த நிகழ்வுகள் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டு  இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


















மன்னார் வாழ்க்கை பெற்றான் கண்டல் புனித நீக்கிலார் ஆலய நுழைவாயில் அலங்கார வளைவு மற்றும் புதிய மணிக்கோபுரம் ஆகியவை மறைமாவட்ட ஆயரினால் திறந்து வைப்பு. Reviewed by Vijithan on July 25, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.