வடக்கு வெற்றி: அடக்கி வாசிக்கும் பொதுபலசேனா!
இந்நிலையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதன் பின்னர் மௌம் காத்து வந்த பொதுபலசேனா தற்பொழுது இந்தியா அல்லது சர்வதேசத்தின் ஒழுங்குப் பத்திரத்திற்கு அமைவாக கூட்டமைப்பு செயற்படுகிறதா என்று அவதானிப்பதாக தெரிவித்தது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசேகர தேரர் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கைப்பற்றும் என்று தாம் முன்பே அறிந்தது என்றும் குறிப்பிட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இனவாதத்தை முதன்மைப்படுத்தியே தனது பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டது என்றும் இனவாதத்தை வைத்தே கூட்டமைப்பு வெற்றி பெற்றது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த அடிப்படையில் கூட்டமைப்பின் எதிர்காலச் செயற்பாடுகளை வைத்தே தமது இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு வெற்றி: அடக்கி வாசிக்கும் பொதுபலசேனா!
Reviewed by Admin
on
September 26, 2013
Rating:

No comments:
Post a Comment