மன்னாரில் ராதிகா சிற்சபைஈசன் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் சந்திப்பு...
சென்ற 29-12-2013 அன்று காலை 9:30 மணியளவில் வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களை மன்னாரில் உள்ள அமைச்சரின் வாசஸ்தலத்தில் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன் போது எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் வடக்கு மக்களின் நிலை பற்றியும் அமைச்சர் எடுத்துக் கூறினார் அதோடு பல அபிவிருத்தி திட்டங்கள் பற்றிய கலந்துரையாடலும் இடம்பெற்றது.
சந்திப்பின் போது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களும் கலந்துகொண்டார்.
கலந்துரையாடலின் பின்னர் மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களையும் சந்தித்தனர்.
மன்னாரில் ராதிகா சிற்சபைஈசன் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் சந்திப்பு...
Reviewed by Admin
on
December 31, 2013
Rating:

No comments:
Post a Comment