மன்னாரில் வழங்கப்பட்ட இந்திய வீட்டுத் திட்டத்தில் குறைபாடுகள் இருப்பின் நடவடிக்கை எடுக்கப்படும்; சு. தட்சணாமூர்த்தி
மன்னாரில் வழங்கப்பட்ட இந்திய வீட்டுத் திட்டத்தில் குறைபாடுகள் இருப்பின் நடவடிக்கை எடுக்கப்படும்; சு. தட்சணாமூர்த்தி
மன்னாரில் வழங்கப்பட்ட இந்திய வீட்டுத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் எமது கவனத்திற்கு கொண்டுவரப்படும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்த யாழ். இந்திய பிரதி துணைத் தூதுவர் சு. தட்சணாமூர்த்தி எதிர்வரும் ஜனவரி மாத இறுதிக்குள் மடுவிலிருந்து திருக்கேதீஸ்வரம் வரையிலான ரயில் சேவை விஸ்தரிக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.
மன்னாரில் யாழ். இந்தியத் துணைத் தூதரகமும் திருமறைக் கலாமன்றமும் இணைந்து நடத்திய தீம்தனனா பரத நடன நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த மூன்று வருடங்களாக இது போன்ற கலை நிகழ்வுகளை நாங்கள் எல்லா மாவட்டங்களில் நடத்திய போதும் மன்னார் மாவட்டத்தை மறந்திருந்தோம். இதற்கு முதலில் மன்னார் மக்களிடம் மன்னிப்பு கோரிக்கொண்டு இப்பொழுது உங்களை நினைவு கூர்ந்தவர்களாக இக் கலை விழாவை இங்கு நடத்துகின்றோம்.
இவ் விழாவை மன்னாரில் நடத்த வேண்டும் என எண்ணிய போது திருமறைக் கலாமன்றம் எங்களுடன் கைகோர்த்தது. கடந்த மாதம் இது போன்ற கலை நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது. அந்த நிகழ்வில் கலை பயிலும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் கௌரவிக்குமுகமாக அவர்களுக்கு ஒரு தளம் அமைத்துக் கொடுத்து அழகான விழாவை ஏற்பாடு செய்திருந்தோம்.
அதேபோல் இங்கும் நடனக் கலை பயிலும் மாணவர்கள், ஆசிரியர்களையும் கௌரவித்து அவர்களுக்கும் ஒரு களத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளோம். முக்கியமாக இந்திய தூதரகம் தன்னாலான சேவையை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறான கலை நிகழ்வுகளை எல்லா இடங்களிலும் மேற்கொண்டு வருகின்றது.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் நல்லூர் கோவில் திருவிழாவின் போது இந்திய கலைஞர்களை இங்கு வரவழைத்து இங்குள்ள கலைஞர்களுக்கு பயிற்சி பட்டறை நடத்துகின்றோம். அவ்வாறு மன்னாரிலும் கலை ஆர்வம் கொண்டவர்களுக்கும் இவ்வாறான பயிற்சி பட்டறை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வுள்ளோம்.
கடந்த மூன்று வருடங்களாக இந்திய தூதரகம் வட மாகாணத்தில் முக்கிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. முக்கியமாக ஐம்பதாயிரம் இந்திய வீட்டுத் திட்டம் வட மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் மலையகத்திலும் நிர்மாணித்துக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.இப்பொழுது 30ஆயிரம் வீடுகளின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.
மன்னார் மாவட்டத்திற்கு 6 ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 3 ஆயிரத்து எழுநூறு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
அதேவேளையில் வீட்டுத்திட்டம் சம்பந்தமாக எங்களுக்கு முறைப்பாடுகள் வந்திருக்கின்றன. இவற்றை நிவர்த்தி செய்வதற்கு நாங்கள் எல்லாவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின் றோம். எதிர்காலத்தில் இவ்வாறான குறைபாடுகள் ஏற்படாதிருக்க இந்திய தூதரகம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
மேலும் இந்த மாதம் அல்லது அடுத்த மாதத்துக்குள் மடுவிலிருந்து திருக்கேதீஸ்வரம் வரை ரயில் சேவை விஸ்தரிக்கப்பட்டுவிடும். இதைத் தொடர்ந்து விரைவில் இச் சேவை தலைமன்னார் பியர் வரைக்கும் நீடிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றது. இச் சேவை ஆரம்பிக்கப்பட்டால் மன்னார் மாவட்டத்துக்கு பெரும் நன்மைக்கு வழி பிறக்கும். இதனால் பொருளாதாரமும் பெருக வாய்ப்பு ஏற்படும் என்றார்.
யாழ் இந்திய துணைத்தூதரகமும் திருமறைக்கலாமன்றமும் இணைந்து நடாத்திய தீம்தனனா-3 Photos
மன்னாரில் வழங்கப்பட்ட இந்திய வீட்டுத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் எமது கவனத்திற்கு கொண்டுவரப்படும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்த யாழ். இந்திய பிரதி துணைத் தூதுவர் சு. தட்சணாமூர்த்தி எதிர்வரும் ஜனவரி மாத இறுதிக்குள் மடுவிலிருந்து திருக்கேதீஸ்வரம் வரையிலான ரயில் சேவை விஸ்தரிக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.
மன்னாரில் யாழ். இந்தியத் துணைத் தூதரகமும் திருமறைக் கலாமன்றமும் இணைந்து நடத்திய தீம்தனனா பரத நடன நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த மூன்று வருடங்களாக இது போன்ற கலை நிகழ்வுகளை நாங்கள் எல்லா மாவட்டங்களில் நடத்திய போதும் மன்னார் மாவட்டத்தை மறந்திருந்தோம். இதற்கு முதலில் மன்னார் மக்களிடம் மன்னிப்பு கோரிக்கொண்டு இப்பொழுது உங்களை நினைவு கூர்ந்தவர்களாக இக் கலை விழாவை இங்கு நடத்துகின்றோம்.
இவ் விழாவை மன்னாரில் நடத்த வேண்டும் என எண்ணிய போது திருமறைக் கலாமன்றம் எங்களுடன் கைகோர்த்தது. கடந்த மாதம் இது போன்ற கலை நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது. அந்த நிகழ்வில் கலை பயிலும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் கௌரவிக்குமுகமாக அவர்களுக்கு ஒரு தளம் அமைத்துக் கொடுத்து அழகான விழாவை ஏற்பாடு செய்திருந்தோம்.
அதேபோல் இங்கும் நடனக் கலை பயிலும் மாணவர்கள், ஆசிரியர்களையும் கௌரவித்து அவர்களுக்கும் ஒரு களத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளோம். முக்கியமாக இந்திய தூதரகம் தன்னாலான சேவையை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறான கலை நிகழ்வுகளை எல்லா இடங்களிலும் மேற்கொண்டு வருகின்றது.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் நல்லூர் கோவில் திருவிழாவின் போது இந்திய கலைஞர்களை இங்கு வரவழைத்து இங்குள்ள கலைஞர்களுக்கு பயிற்சி பட்டறை நடத்துகின்றோம். அவ்வாறு மன்னாரிலும் கலை ஆர்வம் கொண்டவர்களுக்கும் இவ்வாறான பயிற்சி பட்டறை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வுள்ளோம்.
கடந்த மூன்று வருடங்களாக இந்திய தூதரகம் வட மாகாணத்தில் முக்கிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. முக்கியமாக ஐம்பதாயிரம் இந்திய வீட்டுத் திட்டம் வட மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் மலையகத்திலும் நிர்மாணித்துக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.இப்பொழுது 30ஆயிரம் வீடுகளின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.
மன்னார் மாவட்டத்திற்கு 6 ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 3 ஆயிரத்து எழுநூறு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
அதேவேளையில் வீட்டுத்திட்டம் சம்பந்தமாக எங்களுக்கு முறைப்பாடுகள் வந்திருக்கின்றன. இவற்றை நிவர்த்தி செய்வதற்கு நாங்கள் எல்லாவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின் றோம். எதிர்காலத்தில் இவ்வாறான குறைபாடுகள் ஏற்படாதிருக்க இந்திய தூதரகம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
மேலும் இந்த மாதம் அல்லது அடுத்த மாதத்துக்குள் மடுவிலிருந்து திருக்கேதீஸ்வரம் வரை ரயில் சேவை விஸ்தரிக்கப்பட்டுவிடும். இதைத் தொடர்ந்து விரைவில் இச் சேவை தலைமன்னார் பியர் வரைக்கும் நீடிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றது. இச் சேவை ஆரம்பிக்கப்பட்டால் மன்னார் மாவட்டத்துக்கு பெரும் நன்மைக்கு வழி பிறக்கும். இதனால் பொருளாதாரமும் பெருக வாய்ப்பு ஏற்படும் என்றார்.யாழ் இந்திய துணைத்தூதரகமும் திருமறைக்கலாமன்றமும் இணைந்து நடாத்திய தீம்தனனா-3 Photos
மன்னாரில் வழங்கப்பட்ட இந்திய வீட்டுத் திட்டத்தில் குறைபாடுகள் இருப்பின் நடவடிக்கை எடுக்கப்படும்; சு. தட்சணாமூர்த்தி
Reviewed by NEWMANNAR
on
December 29, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 29, 2014
Rating:

No comments:
Post a Comment