எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 20 பாடசாலை மாணவர்கள் : எச்சரிக்கை
இலங்கை பாடசாலை மாணவர்கள் 20 பேர் எயிட்ஸ் நோய் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன தெரிவித்தார்.
இதனை தவிர்க்க உயர்தர மாணவர்கள் அனைவருக்கும் இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் எனவும் பல்கலைக்கழகங்களுக்குள் அனுமதிக்கு முன் அனைத்து மாணவர்களையும் இரத்தப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது நாடு பூராகவும் 9 வயதுக்கும் குறைவான எச்.ஐ.வி பாதிப்புள்ளவர்கள் 71 பேர் இனம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும், குறிப்பிட்டார்.
எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 20 பாடசாலை மாணவர்கள் : எச்சரிக்கை
Reviewed by Author
on
December 07, 2015
Rating:
Reviewed by Author
on
December 07, 2015
Rating:


No comments:
Post a Comment