5000த்திற்கும் அதிகமான அகதிகள் பலி....
2016ஆம் ஆண்டில் ஐரோப்பாவிற்கு குடிபெயர்ந்த அகதிகளில் ஐந்தாரயிரத்திற்கும் அதிகமானோர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
இவர்கள் மத்திய தரைக்கடல் ஊடாக ஐரோப்பாவை சென்றடையும் நோக்கில் பயணம் மேற்கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வியாழக்கிழமையன்று, இத்தாலி கடற்கரை பகுதிக்கு அப்பால் இரு கப்பல்கள் சேதமானதாக வெளியான தகவலை தொடர்ந்து மரண எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், குடியேறிகளுக்கு தஞ்சம் வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5000த்திற்கும் அதிகமான அகதிகள் பலி....
Reviewed by Author
on
December 25, 2016
Rating:

No comments:
Post a Comment