அண்மைய செய்திகள்

recent
-

இயற்கையின் சீற்றத்தால் துவண்டுபோன 7 இலட்சம் தாய்லாந்து மக்கள் : 18 பேர் பலி....


தெற்கு தாய்லாந்தில் கடந்த ஒருவாரமாக பெய்துவரும் கடுமழையால் 18 பேர் பலியாகிவுள்ளனர். சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிகப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

தாய்லாந்தின் தெற்கு பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 1000 க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மழை வெள்ளத்தினால் இதுவரை 18 பேர் பலியாகியுள்ளதுடன், வெள்ளத்தால் போக்குவரத்து வசதிகள் இல்லது மக்கள் பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.


மேலும் பாதிக்கப்பட்டோரை மீட்கும் நடவடிக்கைகள் துரித முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன், குறித்த காலநிலை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இயற்கையின் சீற்றத்தால் துவண்டுபோன 7 இலட்சம் தாய்லாந்து மக்கள் : 18 பேர் பலி.... Reviewed by Author on January 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.