அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு



வவுனியா, ஓமந்தைப் பகுதியில் சட்டவிரோதமாக முதிரை மரங்களை வெட்டிய இருவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 வவுனியா, ஓமந்தை, பெரியமடு பகுதியில் பெறுமதியான முதிரை மரங்களை வெட்டிய இருவர் ஓமந்தை பகுதி வனவளபாதுகாப்பு பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர். 

அவர்களிடம் இருந்து 18 முதிரை மரக்குற்றிகள், மரம் வெட்டும் இயந்திரம், கோடரி என்பன கைப்பற்றப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த இரு நபர்களையும் வவுனியா நீதிபதியின் முன் முன்னிலைப்படுத்திய போதே அவர்கள் இருவருக்கும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.




வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு Reviewed by NEWMANNAR on January 21, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.