11 பேர் பலி -பிரேசில் நாட்டில் 7 மர்ம நபர்கள் சரமாரி துப்பாக்கி சூடு:
பிரேசில் நாட்டின் பெலேம் நகரம் அருகே இயங்கி வரும் பார் ஒன்றில் 7 மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதில் பார் உரிமையாளர் உட்பட 11 பேர் உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட செய்திகள் வெளியாகியுள்ளன. பார் உரிமையாளரின் பெயர் Maria Ivanilza Pinheiro Monteiro என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து 5 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் பலியாகியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விரைந்த பொலிஸ் அதிகாரிகள், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒரு தாக்குதல்தாரி மட்டும் குண்டடி காயங்களுடன் பொலிஸாரிடம் சிக்கியிருப்பதாகவும், மற்ற நபர்கள் தப்பியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
11 பேர் பலி -பிரேசில் நாட்டில் 7 மர்ம நபர்கள் சரமாரி துப்பாக்கி சூடு:
Reviewed by Author
on
May 20, 2019
Rating:

No comments:
Post a Comment