ஈரானை கடுமையாக எச்சரித்த ட்ரம்ப் -பழிவாங்க நினைத்தால் நரக நெருப்பை ஏற்படுத்திவிடுவோம்:
அமெரிக்க சொத்துக்களை தாக்கினால் 52 ஈரானிய தளங்களை மிகவேகமாக தாக்குவோம் என அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானிய இராணுவ உயரடுக்கு சிறப்புப் படையின் தளபதியான குவாசிம் சுலைமானி சமீபத்தில் அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலால் கொல்லப்பட்டதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இதற்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சூளுரைத்திருக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு அமெரிக்கரைக் கொன்ற மற்றும் பலரை மோசமாக காயப்படுத்திய அவர்களின் பயங்கரவாதத் தலைவரை, உலகிலிருந்து விரட்டியடித்ததற்கு பழிவாங்கும் விதமாக, சில அமெரிக்காவின் சொத்துக்களை இலக்கு வைப்பது குறித்து ஈரான் மிகவும் தைரியமாக பேசுகிறது.
ஈரானை கடுமையாக எச்சரித்த ட்ரம்ப் -பழிவாங்க நினைத்தால் நரக நெருப்பை ஏற்படுத்திவிடுவோம்:
Reviewed by Author
on
January 05, 2020
Rating:

No comments:
Post a Comment