மன் அல்.அஷ்ஹர் தேசிய பாடசாலையில் முதற்தடவையாக சிறப்பாக இடம்பெற்ற "நிலாமுற்றம்" நிகழ்வு-படங்கள்
மன் அல்.அஷ்ஹர் தேசிய பாடசாலையில் முதற்தடவையாக சிறப்பாக இடம்பெற்ற "நிலாமுற்றம்" நிகழ்வு 25-02-2020 மாலை 6-30 மணியளவில கல்லூரி அதிபர் ஜனாப் M.Y.மாஹிர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
"சுற்றுப்புறத்தினை நாமும் சுத்தமாக வைத்திருப்போம் தூய்மையான பணி இதை துணிந்தே நாமும் ஏற்றிடுவோம்".
எனும் கருப்பொருளில் பாடசாலையில் சிறப்பாக இயங்கிகொண்டிருக்கிற
- சுகாதாரக்கழகம்
- சுற்றாடல் கழகம்
- பச்சைப்படயணி ஆகிய 03அமைப்பின் மாணவமாணவிகளும் ஆசிரியர்களும் இணைந்து சுற்றாடலை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு நாடகங்கள் கருத்துக்கள் அடங்கிய பேச்சு பாடல்போன்றவற்றின் மூலம் சிறப்பான முறையில் வெளிப்படுத்தினர்.
சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு வளப்படுத்தும் முறையினை தெளிவானமுறையில் வெளிப்படுத்திய நிகழ்வாக அமைந்ததோடு நவீனயுகத்தில் செயற்கைப்பாவனையின் மூலம் ஏற்படுகின்ற விளைவுகளை மாணவர்கள் புரிந்துகொண்டு செயலாற்றவேண்டும் என்பதே இவ்நிகழ்வின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறும் என கல்லூரிஅதிபர் தனது உரையில் குறிப்பிட்டார்.

மன் அல்.அஷ்ஹர் தேசிய பாடசாலையில் முதற்தடவையாக சிறப்பாக இடம்பெற்ற "நிலாமுற்றம்" நிகழ்வு-படங்கள்
Reviewed by Author
on
February 27, 2020
Rating:

No comments:
Post a Comment