அண்மைய செய்திகள்

recent
-

யாழ். கருவி சமூகத்தால் மாற்றுத்திறனாளிக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

யாழ். கருவி சமூகத்தின் ஏற்பாட்டில் கனாடாவினை சேர்ந்த செல்வி அபிராமி பிரேமநாதனின் நிதி அனுசரணையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் வேண்டுகோளிற்கினங்க மாற்றுத்திறனாளிக்கு உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை(09) காலை 9.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 

 இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தார். மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் தொழிற்சந்தையில் பங்குபற்றிய விசேட தேவையுடைய மாற்றுத் திறனாளிகள் 50பேருக்கு 3,000.00ரூபா பெறுமதியான இருபது கிலோகிராம் அத்தியாவசிய பொருட்களும் மற்றும் 2,000.00ரூபா பணமும் வழங்கி வைக்கப்பட்டது.












யாழ். கருவி சமூகத்தால் மாற்றுத்திறனாளிக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு! Reviewed by Author on April 12, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.