அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்.
அகில இலங்கை சமாதான நீதவானாக மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபராக கடந்த காலங்களில் கடமையாற்றி ஓய்வு பெற்ற தனபாலசிங்கம் தனேஸ்வரன் இன்று(05) செவ்வாய்க்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
தனபாலசிங்கம் தனேஸ்வரன் மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபராக கடந்த காலங்களில் கடமையாற்றி ஓய்வு பெற்றவர் என்பதுடன் பல்வேறு சமூக சேவை அமைப்புகளின் பிரதி நிதியாகவும் செயல்பட்டுள்ளார்.
அதே நேரம் அவரது கடமைக்காலங்களில் மன்- சித்திவிநாயகர் இந்து கல்லூரி கல்வி, கலை, விளையாட்டு என பல அபிவிருத்திகளை அடைந்திருந்ததும் குறிபிடத்தக்கது.
அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்.
Reviewed by Author
on
December 05, 2023
Rating:

No comments:
Post a Comment