அண்மைய செய்திகள்

recent
-

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ள உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேர்தலை நடத்துவதை நாளை (02) வரை தொடர்ந்து நிறுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மனுக்களை பரிசீலித்த பின்னர், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லாஃபர் தாஹிர் மற்றும் கே.பி. பெர்னாண்டோ ஆகிய நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.  


கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட பல பிரதேச சபை நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, சுயாதீன குழுக்கள் உள்ளிட்ட தரப்பினரால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சுமார் 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு Reviewed by Vijithan on April 01, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.