அண்மைய செய்திகள்

recent
-

வன்னிப் பகு­தியில் உள்ள பாட­சா­லைகளில் இரா­ணுவத்தினரின் தலை­யீ­டுகள் அதி­க­ரிப்பு. ஆசி­ரி­யர்­களும், மாண­வர்­களும் அசௌ­க­ரியம்.

வன்னிப் பகு­தி­களில் உள்ள பாட­சா­லை­களில் இரா­ணு­வத்­தி­னரின் தலை­யீ­டுகள் அதிகளவில் இருப்­ப­தா­கவும் இதனால் ஆசி­ரி­யர்­களும், மாண­வர்­களும் பாதிப்­ப­டைந்­துள்­ள­தா­கவும் கல்­வி­யி­ய­லா­ளர்கள் விசனம் தெரி­வித்­துள்­ளனர். வன்னிப் பகுதியில் உள்ள பாட­சா­லை­கள் ஆரம்­பித்­ததில் இருந்து இரா­ணு­வத்­தினர் தினமும் காலையில் பாட­சா­லைக்குச் சென்று ஆசி­ரி­யர்கள், மாண­வர்­களின் வரவு உள்­ளிட்ட விப­ரங்­களைத் திரட்டி வரு­வ­தா­கவும் அடிக்­கடி சீரு­டை­யிலும், சிவில் உடை­க­ளிலும் பாட­சா­லைக்குள் விபரம் திரட்­டு­வ­தற்­காக வருகை தரு­வ­தா­கவும் ஆசி­ரி­யர்கள் தெரி­விக்­கின்­றனர். 


 இத்­த­கைய செயற்­பா­டு­களால் பல்­வே­று­பட்ட வேலைப்­ப­ழுக்­களின் மத்­தி­யிலும் அதி­பர்­களும், ஆசி­ரி­யர்­களும் இவர்­க­ளுக்கு வரவுப் பதி­வினை வழங்க வேண்­டி­யுள்­ள­தா­கவும், இவ்­வ­ர­வுகள் ஏன் சேக­ரிக்­கப்­ப­டு­கின்­றது எனத் தெரி­யாத இக்­கட்­டான நிலை காணப்­ப­டு­வ­தா­கவும் தெரி­விக்­கின்­றனர். இத­னை­விட பாட­சாலை மாண­வர்­க­ளுடன் சிநே­க­மான விளை­யாட்டுப் போட்­டி­க­ளையும் நடத்தி வரு­கின்­றனர். 

 தற்­போது பாட­சா­லை­க­ளி­டையில் கோட்­ட­மட்ட, வல­ய­மட்ட, மாவட்ட, மாகாண, தேசி­ய­மட்ட போட்­டிகள் இடம்­பெற்று வரு­வதால் இவற்றில் பங்­கு­பற்றும் மாண­வர்கள் இரா­ணு­வத்­தி­ன­ருடன் இணைந்து வேறு போட்­டி­க­ளிலும் ஈடு­பட்டு வரு­வதால் கல்விச் செயற்­பா­டுகள் பாதிக்­கப்­ப­டு­வ­தா­கவும் பெற்­றோர்கள் விசனம் தெரி­வித்­துள்­ளனர். இவ்­வா­றான இரா­ணு­வத்­தி­னரின் செயற்பாடுகளால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதாக கல்வி யியலாளர்களும், பெற்றோர்களும் கவலை தெரிவிக்கின்றனர்

வன்னிப் பகு­தியில் உள்ள பாட­சா­லைகளில் இரா­ணுவத்தினரின் தலை­யீ­டுகள் அதி­க­ரிப்பு. ஆசி­ரி­யர்­களும், மாண­வர்­களும் அசௌ­க­ரியம். Reviewed by Admin on September 27, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.