அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் கொள்ளையில் ஈடுபட்ட இளம் ஜோடி கைது


வவுனியாவில் வீடுகளில் தங்க நகைகளை கொள்ளையிட்டு வந்த இளம் தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த தம்பதிகள் வவுனியாவிலுள்ள இரண்டு மாடி வீடு ஒன்றில் மூன்று சந்தர்ப்பங்களில் 5 இலட்சத்துக்கு அதிகமான தங்க நகைகளை கொள்ளையிட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இவர்களால் கொள்ளையிடப்படும் தங்க நகைகள் அடகு வைக்கப்பட்டு பணமாக பெறுவதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை 21 வயதான குறித்த தம்பதி வவுனியா சிதம்பரபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்களை இன்று வவுனியா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வவுனியாவில் கொள்ளையில் ஈடுபட்ட இளம் ஜோடி கைது Reviewed by NEWMANNAR on July 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.