அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மக்கள் தமிழ் தேசி­யத்­திற்கு கொடுத்த வெற்­றி­யா­கவே நான் கரு­து­கி­­றே­ன். சட்­டத்­த­ரணி அ.சூ.பி. சிராய்­வா.

வட­மா­காண சபை தேர்­தலில் மன்னார் மாவட்­டத்தில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பில் போட்டி­யிட்டு 12927 அதி­கூ­டிய வாக்­கு­களை பெற்று 1ஆம் இடத்­திற்கு தெரி­வு­செய்­யப்­பட்ட சட்­டத்­த­ரணி அ.சூ. பிறிமுஸ் சிராய்வா தனது வெற்­றிக்­குப்பின் கருத்து தெரி­விக்­கையில்.., 


 தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு மன்னார் மாவட்­டத்தில் 3 ஆச­னங்­களை பெற்று வெற்­றி­யீட்­டி­யி­ருக்­கின்­றது என்று சொன்னால் மன்னார் மாவட்­டத்தில் இருக்­கின்ற மக்கள் தமிழ் தேசி­யத்­திற்கு கொடுத்­தி­ருக்­கின்ற ஆணை­யா­கத்தான் இந்த வெற்றி அமைந்­தி­ருக்­கின்­றது.

 தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு ஆட்­சியை அமைத்து நிச்­ச­ய­மாக மன்னார் மாவட்­டத்தில் இருக்கும் மக்­க­ளுக்கு தங்­களால் இயன்ற வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்கும் அதேநேரம் மன்னார் மாவட்­டத்தில் இருக்­கின்ற உரி­மைகள் தொடர்­பாக வட மாகா­ணத்தில் இருக்­கின்ற பல்­வே­று­பட்ட அடக்­கு­மு­றை­க­ளுக்கு எதி­ராக தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு தன்­னு­டைய பலத்த குரலை ஒலிக்­கச்­செய்யும் என்­ப­திலே எந்த மாற்­றுக்­க­ருத்­துக்கும் இட­மில்லை. 

 அத்­துடன் தனது கட்­சிக்கும் தனக்கும் வாக்­க­ளித்த அனைத்து நல் உள்­ளங்­க­ளுக்கும் என்­னோடு தோள் நின்று உழைத்த அனை­வ­ருக்கும் நன்றி தெரி­விக்­கின்றேன் என்றார்.
மன்னார் மக்கள் தமிழ் தேசி­யத்­திற்கு கொடுத்த வெற்­றி­யா­கவே நான் கரு­து­கி­­றே­ன். சட்­டத்­த­ரணி அ.சூ.பி. சிராய்­வா. Reviewed by Admin on September 27, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.